சீந்திற் கிழங்கு என்றால் என்ன ? அதனை பற்றி தெரிந்து கொள்ளவும்.
சீந்திற் கிழங்கு
சீந்திற் கிழங்கு இவற்றில் மொத்தம் மூன்று வகைகள் உள்ளன அவை சீந்தில், பேய்ச்சீந்தில், பொற்சீந்தில் எனப்படும் இவை அனைத்தும் கொடியினத்தை சேர்ந்தது.
இவற்றில் அதிக அளவு உயிர்சத்து காணப்படுகிறது.இதற்கும் பேய்ச்சீந்தலுக்கும் மருத்துவ குணத்தை சில வேறுபாடுகள் காணப்படுகிறது .
சித்த , ஆயுர்வேத யுனானி மருத்துவ முறைகளில் இக்கிழங்குகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இவற்றை அமிர்தவல்லி , சோமவல்லி என்று கூறுவார்கள்.
;சீந்திற் கிழங்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட உதவுகிறது இதனால் அதிக அளவு பசி எடுக்கும் .
மேகநோய்கள் 21 வகை என்று மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது அத்தனை நோய்களையும் இது போக்க உதவுகிறது . அது மட்டுமல்லாமல் ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை போக்குகிறது .
வயிற்றுபோக்கை குறைக்கவும் உதவுகிறது .பித்தம் அதிகரிப்பதினால் ஏற்படும் நோய்களை கட்டு படுத்துகிறது ரத்ததில் ஏற்படும் பித்தத்தையும் முற்றிலுமாக நீக்க உதவுகிறது.
இவற்றை நாம் எப்படி சாப்பிட வேண்டும் என்று தற்போது பார்க்கலாம் சீந்திற் கிழங்கை நன்கு நசுக்கி நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்.
பின்பு அதனை வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் குடித்து வரலாம் இவ்வாறு குடித்து வருவதால் பல நோய்களை நம்மால் தீர்க்க முடியும்.
No comments