போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது


பாடலூரில் உள்ள டாஸ்மாக் கடை திறப்பு 

பெரம்பலூர் மாவட்டம் ஊட்டத்தூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வந்துகொண்டிருந்த டாஸ்மாக் கடை ஒரு ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்களின் எதிர்ப்பால் மூடப்பட்டது
இதனை அடுத்து அதே சாலையில் வேறு ஒரு இடத்தில் அந்த டாஸ்மாக் கடையை திறக்க முயற்சி செய்துள்ளனர் அதனை கண்ட பொதுமக்கள் இங்கே கடை திரக்க கூடாது என்றவுடன் அன்றே கடை மூடப்பட்டது .

இதனையடுத்து தங்கால் என்ற இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க ஜூலை 25ஆம் தேதி முயற்சி செய்ய போது அங்கே வந்த பொதுமக்கள் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இரவு 10 மணி வரையும் இந்த போராட்டம் தொடங்கியது அதனை அடுத்து இரண்டு நாட்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் அதனால் தற்போது கடை திறக்கப்படாது என அறிவித்த பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 இதனையடுத்து அந்த இடத்தில் நேற்று முன்தினம் கடை திறக்கப்படுவதாக செய்தி வெளிவந்தது இதனையடுத்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுபான கடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு வந்த காவல்துறையினர் நீங்கள் கடந்து செல்ல வேண்டும் அப்படி கலைந்து செல்லவில்லை என்றால் நீங்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

 அப்பொழுதும் அவர்கள் கலைந்து செல்லவில்லை இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரை பிடித்து  வேனில் ஏற்றினர் இதனால் பயம் அடைந்த பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர் இதனை அடுத்து அதிக அளவில் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது .
போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது Reviewed by awareness tamilan on September 26, 2018 Rating: 5

No comments