தனியார் வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டையில் நாளை நடைபெறுகிறது
புதுக்கோட்டை மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சி பெறுபவர்கள் முகாம் வரும் 28-ஆம் தேதி அன்று மேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது .
இந்த முகாமில் புதுகை மாவட்டத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர் இந்த முகாமில் வேலையில்லாத இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் இதற்கு வயது ஒரு தடையாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.
எனவே இந்த முகாமில் கலந்து கொள்ளும் விரும்பும் இளைஞர்கள் வரும் 28ம் தேதி காலை 10 மணி அளவில் மேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
Reviewed by awareness tamilan
on
September 26, 2018
Rating:

No comments