பெண்ணுக்கு நாகப்பாம்பு குழந்தை ? லாலாப்பேட்டை அருகே பரபரப்பு
பெண்ணுக்கு நாகப்பாம்பு குழந்தை
கரூர் மாவட்டம் உள்ள மேட்டுப்பட்டி சேர்ந்தவர் கோகிலா இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிய நிலையில் அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இந்த நிலையில் கோகிலா ஒன்பது மாதங்களுக்கு முன்பு நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அங்கே ஸ்கேன் செய்து பார்த்ததில் நீங்கள் கர்ப்பமாக இல்லை என மருத்துவர் தெரிவித்தனர் .
அவர் குழந்தை வரம் கேட்டு வாரம் தோறும்வேடசந்தூரில் உள்ள கோவிலுக்கு சென்று சாமியை வழிபட்டு வந்து கொண்டிருந்தார் அப்போது அங்கு அருகில் இருந்த ஒரு பூசாரி அவர் எடுத்துச் சென்ற ஸ்கேனை பார்த்துவிட்டு நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார். வயிற்றில் நாகப்பாம்பு குழந்தையாக அவதரித்திருப்பதாகவும் பௌர்ணமி அன்று நள்ளிரவு 12 20 மணி அளவில் குழந்தை பிறப்பதாக கூறியுள்ளார் இந்த தகவல் அங்குள்ளஅனைவருக்கும் பரவியது அதனால் அந்த கோயிலுக்கு கூட்டம் அதிகரித்தது .
அதுமட்டுமல்லாமல் பௌர்ணமியான நேற்று முன்தினம் மாலை மேட்டுப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரி ஒருவர் உடுக்கை அடித்து சாமி கும்பிட ஆரம்பித்தார் அப்போது அவர் ஒருவருக்கு நாகப்பாம்பு குழந்தை பிறக்கப் போவதாகவும் கூறினார் இதனைக் கேட்ட பொதுமக்கள் அதிகளவில் கூடினர். இந்த தகவல் லால்பேட்டையில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றது செய்தியைக் கேட்ட காவலர்கள் அந்த கோயிலுக்கு விரைந்து சென்றனர் போலீஸ் வருவதை கண்டு அங்குள்ள பொதுமக்கள் செல்ல தொடங்கினர். கோவிலுக்கு வந்த போலீசார் அந்த பெண்ணை 108 ஆம்புலன்சில் ஏற்றி குளித்தலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மருத்துவர்கள் அந்த பெண்ணை பரிசோதனை செய்தனர்.
பரிசோதித்து முடித்தபின் அந்த பெண் கர்ப்பமாக இல்லை என மருத்துவர்கள் கூறினார்கள் . அந்தப் பெண்ணை முழுவதுமாக சோதிக்க வேண்டும் என்று பார்த்தவர்கள் கூறினார்கள் அதனால் அவர் மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு உண்டாகியது .
பெண்ணுக்கு நாகப்பாம்பு குழந்தை ? லாலாப்பேட்டை அருகே பரபரப்பு
Reviewed by awareness tamilan
on
September 26, 2018
Rating:

No comments