வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு சுங்க வரி உயர்வு
தங்க நகை மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்ட 19 பொருள்கள் மீதான சுங்க வரி உயர்வு மத்திய அரசு அறிவிப்பு புதுடெல்லியில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்க நகை மற்றும் வாஷிங் மெஷின்கள் உள்ளிட்ட 19 பொருள்களின் மீதான சுங்க வரியை மத்திய அரசு அதிகரித்து அந்தப் பொருட்களின் விலை உயரும் சுங்க வரி உயர்வு கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயான நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.4% ஆக அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து அத்தியாவசியமற்ற ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதி கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருள்களுக்கான சுங்க வரியை மத்திய அரசு அதிகரித்து உள்ளது
அதன்படி தங்கநகைகள் வாஷிங் மெஷின் மற்றும் ஹேர்கண்டிஷ்னர் மிஷின் ஒலிபெருக்கி ரேடியல் கார் டயர் சமையல் சாதனங்கள் சில வகையான பிளாஸ்டிக் பொருட்கள் சூட்கேஸ் காலணிகள் விமான எரிபொருள் உள்ளிட்ட 19 வகையான பொருள்களுக்காக சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது பத்து கிலோவுக்கு குறைவாக ஏர்கண்டிஷன் மெஷின் ரெப்ரிஜிரேட்டர் வாஷிங் மெஷின் ஆகியவற்றின் மீது இரு மடங்காக அதாவது 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு சுங்க வரி உயர்வு
Reviewed by awareness tamilan
on
September 27, 2018
Rating:

No comments